1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman asking help from public for fund

ஜீரோன்னு சொல்றாங்க.. திரள்நிதி கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க!.. சீமான் கோரிக்கை...

seeman
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கலில் சீமானும் ஒருவர். 15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அதிமுக மற்றும் திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கும் எதிராக தமிழ் தேசியத்தை முன்வைத்து சீமான் அரசியல் செய்து வருகிறார்.

எனவே மாற்று அரசியலையும், அரசியல் மாற்றத்தையும் விரும்பிய சிலர் இந்த கட்சிக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக அதன் வாக்கு வங்கி 8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் விஜயின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி தற்போது சரிவை சந்தித்திருக்கிறது..

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அதோடு காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியடைந்தார்
. இந்நிலையில்தான் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மக்கள் இடைத்தேர்தலுக்கு திரள்நிதி கொடுத்து கரங்களை பலப்படுத்த வேண்டும்.. எங்களை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஜீரோ என சொல்கிறார்கள்..

ஆனால் இந்த ஜீரோவை பார்த்துதான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள்.. நாம் முன்வைத்த அரசியல் இன்று தேவையா தேவையில்லையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. நாம் பேசிய அரசியலின் தேவை இன்ற மக்களுக்கு புரிகிறது.. குடிப்பதற்கு தூய நீர் இல்லை.. உணவு நஞ்சாகிறது’ என அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விநாயகரை கரைக்க சென்ற 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!....