5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் இந்தியா! ஜடேஜா - சாய் சுதர்சன் டிரா செய்வார்களா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, விக்கெட் இழப்பை தவிர்க்க முடியாமல் திணறி வருகிறது.
நேற்று தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா, இன்று போட்டியை டிரா செய்யும் நோக்குடன் களமிறங்கியது. ஆனால், இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவ், துருவ் ஜுரல், மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் அபாரமாக பந்துவீசி இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஜடேஜா, சாய் சுதர்சன் களத்தில் இருக்கும் நிலையில் இருவரும் நிதானமாக விளையாடி டிரா செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran