1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. indian ship pilot is died in iran attack

ஹார்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்!. இந்திய மாலுமி பலி!..

hormuz
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கிய போது வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான் ஹார்மூஸ் நீரினையை ஈரான் மூடியது.

இதன் காரணமாக இந்தியாவில் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டு எரிபொருளின் விலை உயர்ந்தது. எனவே, ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

ஆனாலும் ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா பலமுறை சொல்லியும் ஈரான் அதை கைவிடவில்லை. இந்நிலையில்தான் ஹார்மூஸ் பக்கமாக சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

மொம்பாசா என்ற கப்பலில் பணியாற்றிய இந்திய மாலினி உயிரிழந்துள்ளார். மேலும் அந்த கப்பலில் பணியாற்றிய 6 இந்தியர்கள், மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சர்வதேச சட்ட மீறல் என UAE கண்டனம் தெரிவித்திருக்கிறது..