இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!
பேச்சிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. அந்த படம் பெரிய வெற்றிப் பெறவில்லை என்றாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. இடையில் பிரபல நடிகர் ஒருவரின் விவாகரத்தில் இவர் பெயர் அடிபட்டு அவரை சர்ச்சைகளில் சிக்கவைத்தது.
இந்நிலையில் திவ்யபாரதி தெலுங்கு இயக்குனரான நரேஷ் குப்பிலி மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய கோட் படத்தில் நாயகியாக நடிக்க திவ்யபாரதி ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தில் கதாநாயகனாக சுதிகாலி சுதீர் நடித்து வந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் நரேஷ் எக்ஸ் தளத்தில் திவ்யபாரதியை அவமதிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள திவ்யபாரதி “நான் தமிழ்ப் படங்களில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். ஆனால் இந்த ஒரு இயக்குனர் மட்டும் எல்லைத் தாண்டி அவமதிக்கும் கருத்துகளை பொதுவெளியில் வெளியிடுகிறார். படப்பிடிப்பின் போது அவர் இவ்வாறுதான் நடந்துகொண்டார். அப்போது இயக்குனர் மௌனம் காத்தார். அதனால்தான் இதுபோன்ற நபர்கள் தைரியம் பெறுகிறார்கள்.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.