1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. sonam-wangchuk-demands-no-action-on-protesting-students

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும், நியாயம் கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
 
டெல்லியில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களும் தெருவில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு முகமையின் குளறுபடிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அமைதியான முறையில் நடந்த இந்தப் போராட்டங்களின் போது, காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் மீது வழக்குகளும் பதியப்பட்டன.
 
மாணவர்களின் குரலுக்கு ஆதரவாகவும், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியும் பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுத்தார். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் மீது நியாயமற்ற முறையில் அழுத்தம் தரப்படுவதை எதிர்த்தும், அவர்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் தனது தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
 
இந்த நிலையில் தனது போராட்டத்தின் இடையே, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிஜேந்திர சிங் ஆகியோருக்கு சோனம் வாங்சுக் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், 
 
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வித சட்ட ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இதற்கு மத்திய அரசு உரிய உறுதி அளித்தால் எனது உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில், காலைவரையின்றி போராட்டத்தைத் தொடர வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... બધા વાંચો
அடுத்த கட்டுரையில்
ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...