ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 செப்டம்பர் 2025 (14:57 IST)

8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!

8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!
ஒடிசா மாநிலத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 22 வயது நிரூபமா பரிதா என்ற இளம் பெண்ணின் உடல், ஒரு சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அவரது காதலனான தேபாசிஸ் பிசோய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
பூபனேஸ்வரை சேர்ந்த நிரூபமா பரிதா ஜனவரி 24 அன்று தனது சொந்த ஊரான ரன்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு, காணாமல் போனார். பல மாதங்களாக, அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் நிரூபமாவின் செல்போன், அவரது மறைவுக்கு பின்னரும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு, காவல்துறை  விசாரணை செய்ததில், தேபாசிஸ் பிசோய் தான் நிரூபமாவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
நிரூபமாவை கொலை செய்து, அவரது உடலை கைவிடப்பட்ட சுரங்கத்தில் வீசியுள்ளார். மேலும், அவர் நிரூபமாவின் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுத்துள்ளார். அந்த செல்போன் தான் அவரை காட்டி கொடுத்தது.
 
 
Edited by Mahendran