1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 மே 2025 (12:49 IST)

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதன் பின்னர், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் உள்ளன. ஆனால் இந்திய ராணுவம் அதைத் தகர்த்து வருகிறது. இதனுடன், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது, இதற்கு இந்தியா சிறப்பாக பதிலடி அளிக்கிறது.
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி இருக்கிறது. இந்நிலையில், தவறான வதந்திகளை பரப்புவது பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறது. இதனால், மத்திய அரசு பொதுமக்களை பீதி அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
 
குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற வதந்தி குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது. இதற்கு பதிலாக, நாடு முழுவதும் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது" என தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் LPG உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran