இலங்கையில் நடக்கும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம் படுதோல்வி படமாக அமைந்தது.
அதையடுத்து தற்போது மதராஸி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் இறுதிகட்டக் காட்சிகளை தற்போது இலங்கையில் படமாக்கி வருகிறாராம். மதராஸி படத்தில் படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார்.
முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முருகதாஸுக்கு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.