1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
  4. Ramadan Month: Nabikal Nayakam says...!

ரமலான் மாதம்: நபிகள் நாயகம் கூறுவது...!

ரமலான்
ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. சைத்தான்கள் விளக்கப் படுகின்றனர் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நோன்பு  நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும் என நபிகள் நாயகம் அவர்கள்  கூறினார்கள்.
 
சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு  எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
 
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ये भी पढ़ें
அகத்தியர் கூறும் வர்மக்கலை பற்றிய குறிப்புகள்...!