தமிழக முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!
சாதி பெயர்கள் கொண்ட பெயர்களை மாற்றியமைத்து அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
"எந்தப் பெயரும் சாதி அடிப்படையிலிருக்க கூடாது என்பதே எங்கள் கொள்கை" என்று கூறிய திருமாவளவன், முதல்வரின் அரசாணைக்கு நன்றி கூறினார். மேலும், சில பெயர்களில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றுவது குறித்து கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
கோவை பாலத்துக்கு ஜி.டி. நாயுடு என்று பெயரிடுவது குறித்து பேசிய அவர், அது "சாதியை வளர்க்காது என நம்புகிறோம்" என்றும், பாலத்துக்குச் சுருக்கமாக 'ஜி.டி.' என்று மட்டும் பெயரிட்டால் இன்னும் மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
Edited by Mahendran