SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!
மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மம்தாவின் கடிதம் அரசியலமைப்பு அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று சாடிய சுவேந்து அதிகாரி, SIR என்பது நாட்டில் 9வது முறையாக நடக்கும் செயல்முறை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இறந்தவர்கள், போலி மற்றும் சட்டவிரோத வாக்காளர்கள் நீக்கப்படுவதால், ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சியே மம்தா குழப்பத்தை உருவாக்குகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்படும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி தனது கடிதத்தில், SIR செயல்முறை திட்டமிடப்படாததாகவும், குழப்பமாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது என்றும், அதில் பல கட்டமைப்பளவிலான பிழைகள் உள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
Edited by Siva