1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind why vijayabaskar joined in tvk

இன்னும் 5 எம்.எல்.ஏக்கள்!. நான் பாத்துக்குறேன்!.. தவெகவிடம் சொன்ன செந்தில் பாலாஜி?!..

vijaya baskar
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு, குட்காவை தமிழகத்தில் அனுமதிக்க மாத மாதம் லட்சக்கணத்தில் லஞ்சம் வாங்கிய புகார், 200 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டாமல் இருந்த புகார் என்ற பல புகார்கள் இருக்கிறது. இது தொடர்பாக சிபிஐயும் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

ஆனால் அப்படிப்பட்ட விஜயபாஸ்கரை ஏன் விஜய் தவெகவில் சேர்த்தார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், ‘மக்கள் பணத்தை தொட்டவர்களை சும்மா விடமாட்டேன்’ என சட்டமன்றத்தில் பேசிவிட்டு இந்த பக்கம் சி.விஜயபாஸ்கரை ஏன் அவர் சேர்த்தார் என பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள். திமுகவும் இந்த கேள்வியை எழுப்பி வருகிறது..

ஊழல் செய்வதவர்களை தூய்மையானவர்களாக மற்றும் வாஷிங்மெஷின் வந்திருக்கிறது என திமுகவினர் தொடர்ந்து நக்கலடித்து வருகிறார்கள்.இந்நிலையில், சி.விஜயபாஸ்கரை தவெகவில் இணைப்பதற்கு முதல்வர் விஜய் ஏன் சம்மதித்தார் என்பதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

என்னை மட்டும் நீங்கள் தவெகவில் சேர்த்துக் கொண்டால் மேலும், 5 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யவைத்து தவெகவில் சேர்ப்பேன். அதற்கு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சி.விஜயபாஸ்கர் உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.  இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டால் 12 தொகுதிகள் காலியாகும். அந்த 12 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் அதன் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 118ஆக உயர்ந்து தவெக அரசு தனிப் பெரும்பான்மை பெற்றுவிடும். அதை தான் செய்து காட்டுவதாக விஜயபாஸ்கர் சொல்லியிருக்கிறாராம்.

அதனால்தான் விஜயபாஸ்கரை கட்சியை சேர்த்துக் கொள்ளலாம் என முக்கிய நிர்வாகிகள் விஜய்க்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தனி பெரும்பான்மைக்கு இதை தவிர வேறு வழியில்லை என்பதால் விஜயும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது..