திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2025 (14:57 IST)

இன்று காலை உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

இன்று காலை உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
இன்று அதாவது செப்டம்பர் 22 அன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதே இந்த மழைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகத்தில் மழையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
தேனி
 
திண்டுக்கல்
 
கோயம்புத்தூர்
 
நீலகிரி
 
சேலம்
 
தருமபுரி
 
கிருஷ்ணகிரி
 
திருப்பத்தூர்
 
கடலூர்
 
விழுப்புரம்
 
செங்கல்பட்டு
 
செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 
நீலகிரி
 
கோயம்புத்தூர்
 
சென்னையை பொருத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran