1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay wont answer in tn assembly on monday

திங்கள் கிழமை பதில் சொல்ல மாட்டேன்!.. எஸ்கேப் ஆகிய முதல்வர் விஜய்!..

udhyanidhi vijay
கடந்த 3ம் தேதி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக ஆட்சி துவங்கி 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளது. 16 காவல் மரணங்கள் பதிவாகியிருக்கிறது. எங்கள் ஆட்சியில் காவல் நிலையம் மரணங்கள் நடந்த போது ‘ எங்களுக்கு Sorry  வேண்டாம்.. நீதிதான் வேண்டுமென விஜய் பேசியிருந்தார்.. ஆனால் இப்போது 16 காவல் மரணங்கள் நடந்துள்ளன.. ஆனால் Sorry - யும் இல்லை.. நீதியும் இல்லை’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்..

மேலும், ‘சினிமா பன்ச் வசனம் பேசாம, ஆக்சன், கட் சொல்லாமல், திமுக மீது பழி போடாமல் முதலமைச்சர் விஜய் என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார்.. அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் நான் திங்கள் கிழமை பதில் சொல்கிறேன்.. ஆனால் இவர்களெல்லாம் ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.. இவர்கள் யாரும் எழுந்து ஓடக்கூடாது’ என்று சொல்லிவிட்டு சட்டசபையிலிருந்து கிளம்பி சென்று விட்டார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே, வருகிற திங்கள் கிழமை விஜய் சட்டசபையில் என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில், தமிழக சட்டசபையில் வருகிற திங்கள் கிழமை நடக்கவிருந்த கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களின் விரிவான பதிலுரைகள் மற்றும் முக்கிய விவாதங்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் திங்கள் கிழமை கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு நேரடியாக அலுவலக வாதங்கள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை திமுக கடும் விமர்சனம் செய்து வருகிறது.. எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்தான் முதலமைச்சர் விஜய் கேள்வி நேரத்தை ரத்து செய்திருக்கிறார் என அவர்கள் கூறி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளி பண்டிகை எதிரொலி!.. ரயில் முன்பதிவு நாளை துவக்கம்..