1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 மே 2025 (09:18 IST)

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

classroom
ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.  
 
அதே நேரத்தில், கதுவா மாவட்டத்தின் உதம்பூர், பானி, பஷோலி, மகான்பூர், பட்டு, மல்ஹார் மற்றும் பில்லாவர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
 
மேலும், பாகிஸ்தானின் பல விமானத் தளங்கள் மற்றும் ராணுவ முயற்சிகளை இந்தியா தடுப்பதிலும் வெற்றி கண்டது.
 
இந்த பதில்கள் பிறகு, மே 12 அன்று, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம், தற்காலிகமாக துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டும் இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
 
Edited by Siva