பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்
பிகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 'இண்டி' கூட்டணி தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி முடிவை அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
அவரது பதிவில், "நான் அரசியலை விட்டு விலகுகிறேன். எனது குடும்பத்துடனான உறவையும் முறித்துக்கொள்கிறேன். சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோர் தான் என்னிடம் இதை செய்ய சொன்னார்கள். அனைத்து பழிகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
லாலுவின் ஒரு மகன் தேஜ் பிரதாப் ஏற்கெனவே தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், இப்போது மகளும் அரசியலில் இருந்து விலகியிருப்பது, லாலுவின் குடும்ப அரசியலில் ஏற்பட்டுள்ள சலசலப்பை காட்டுகிறது.
Edited by Mahendran