வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2025 (09:48 IST)

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி.. 13 தொகுதிகளில் மட்டும் காங். முன்னிலை..!

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி.. 13 தொகுதிகளில் மட்டும் காங். முன்னிலை..!
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பம் முதலே பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது, ஆட்சி அமைக்க தேவையான இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி , மொத்தமாக 155 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதில், பா.ஜ.க. தனியாக 74 தொகுதிகளிலும், நிதிஷ் குமார் கட்சி 69 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
 
அதேபோல், எதிர்க்கட்சிக் கூட்டணியான ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் கூட்டணி 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் ஆர்.ஜே.டி. 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பீகாரில் ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் இருந்தால் போதும் என்ற நிலையில், தற்போது 154 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதால், இந்த முன்னிலை தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலே மீண்டும் ஆட்சி அமைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva