குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்து! 240 பேரின் நிலை என்ன? அதிர்ச்சி தகவல்கள்..!
குஜராத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்ற கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 240க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில்தான் விமானம் விழுந்ததாக கூறப்படும் நிலையில், விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
விமான விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran