1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2025 (19:00 IST)

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

supreme court
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றிய நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என திமுக தலைவர் மற்றும் முதல் அமைச்சர் முக. ஸ்டாலின் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில், திமுகவுக்கு முன்னதாக ஆம் ஆத்மி, வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் என்பவர், இந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கில், அரசியல் அமைப்பையே சவால் செய்யும் இந்த மசோதா, முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியை குறைக்கிறது என்றும், தன்னிச்சையான நிர்வாக தலையீட்டுடன் செயல்படுகிறது என்றும், சிறுபான்மையினரின் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமைகளை பறிக்கிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran