மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கும் பிரபுதேவா… ஹீரோ யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.
அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.
இந்நிலையில் பிரபுதேவா ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கவுள்ளார். தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கவுள்ள புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் பிரபுதேவா.