எனது நூறாவது படத்தில் மோகன்லால் கண்டிப்பாக இருப்பார்… பிரியதர்ஷன் உறுதி!
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தற்போது திரைப்படம் இயக்குபவர்களிலேயே அதிக படங்கள் இயக்கியது அவர்தான். பல தென்னிந்திய ஹிட் படங்களை இந்தியில் ரீமேக் செய்து அங்கும் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
மலையாளத்தில் அவர் தொடர்ந்து மோகன்லாலை வைத்து படங்கள் இயக்கியது போல இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கினார். தற்போது அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரை வைத்து ஹைவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் சினிமாவில் 100 படங்களை இயக்கி முடித்தது ஓய்வு பெற்றுவிடுவேன் என அறிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பேசியுள்ள பிரியதர்ஷன் “நான் மிகவும் சோர்வாக உள்ளேன். அதனால் 100 படங்களோடு ஓய்வு பெறப்போகிறேன். ஓய்வுக்குப் பிறகு எந்த திட்டமும் இல்லை. ஆனால் கண்டிப்பாக எனது நூறாவது படத்தில் மோகன்லால் நடிப்பார்” எனக் கூறியுள்ளார்.