தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு வெளியிட்டப் புகைப்படம்!
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது. படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பாங்காங்கில் தொடங்கியது.
அங்கு ஒரு வாரத்துக்கு மேல் நடந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்துப் படக்குழுவினர் அனைவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.