எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்
நடிகர் விஷால் விருதுகள் வழங்கும் நடைமுறையே "பைத்தியக்காரத்தனம்" என்று கடுமையாக சாடியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
"விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான்கு பேர் ஒரு அறையில் அமர்ந்துகொண்டு, ஏழு கோடி மக்களுக்கு பிடித்த விஷயங்களை எது என்று தீர்மானிக்கிறார்கள். அப்படி சொல்வதற்கு அவர்கள் என்ன பெரிய மேதாவிகளா?
இதில் நான் தேசிய விருதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். விருதுகளுக்கு கமிட்டிகள் உள்ளன. ஆனால், உண்மையான மதிப்பீட்டிற்குக் மக்கள் மத்தியில் சர்வே எடுக்கப்பட வேண்டும்
ஒருவேளை எனக்கு விருது அறிவிக்கப்பட்டால், நான் அந்த விருதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன். அது தங்கமாக இருந்தால், அதை விற்று அன்னதானத்திற்கு கொடுத்துவிடுவேன்."
"எனக்கு விருது கொடுத்துவிடாதீர்கள். அதற்கு தகுதியான மற்ற சிறந்த கலைஞர்களுக்குக் கொடுங்கள்" என்று தான் சொல்லிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva