1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 ஜூன் 2025 (09:06 IST)

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில், இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து, வெற்றிக்கு பின்னர் வீரர்களில் ஒருவர் இந்திய தேசிய கொடியை ஏந்தி மைதானத்தை வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக சிஏவிஏ நேஷனல் வாலிபால் போட்டி நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்தியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
 
இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்திய வீரர்கள் துள்ளி குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வீரர் உடனே இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி, பாகிஸ்தான் வீரர்கள் பக்கம் சென்று வெற்றியை கொண்டாடிய நிலையில், சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த  வெற்றியை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva