1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 5 ஜூன் 2025 (09:16 IST)

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

Kohli

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பை வென்றுள்ள நிலையில் ஐபிஎல் வெற்றிகள் பெரிதல்ல என விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 

கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இத்தனை ஆண்டுகளாக விராட் கோலி, ஆர்சிபி அணி கோப்பை வெல்ல வேண்டும் என போராடி வரும் நிலையில், ரசிகர்களும் 18 ஆண்டுகளாக கோப்பை வெற்றிக்காக காத்திருந்தனர். 

 

இந்த சீசனில் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு சென்று பஞ்சாபை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆர்சிபி. இதை ரசிகர்கள் பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஐபிஎல் கோப்பை வெற்றி குறித்து பேசிய விராட் கோலி “இந்த தருணம் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறந்த தருணங்களில் ஒன்று. ஆனால் இப்போதும் நான் ஐபிஎல் கோப்பை வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டை விட 5 மடங்கு கீழேதான் மதிப்பிடுவேன். அந்தளவு நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன். அதனால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

 

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதால் உங்களை பலரும் பாராட்டுவதோடு, உலக கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் நல்ல மரியாதையும் கிடைக்கும். அதற்காக உங்கள் இதயத்தையும், உயிரையும் கொடுங்கள்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K