145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள், இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் அசத்தியது அனைவரும் அறிந்ததே. தென்னாப்பிரிக்காவுக்காக ரபாடா ஐந்து விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்ற, ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் மிரட்டினர். மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள், 145 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு விநோத சாதனையை கண்டது. அதாவது, 1880 இல் டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியதிலிருந்து, முதல் முறையாக இரு அணிகளின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் தங்கள் முதல் இன்னிங்ஸில் 0 ரன்களுக்கு அவுட் ஆகினர்.
நேற்று ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் ஆகியோர் 'டக்' அவுட்டைப் பதிவு செய்தனர். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 10வது முறையாகும்.
Edited by Mahendran