தொடர்புடைய செய்திகள்
- வைரமுத்துவுக்கு எதிராக உப்பு பேரணி: கோவை பாஜகவினர்களின் விநோத போராட்டம்
- உப்புமா கம்பெனியெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேக்குறாங்க! புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்
- கூடுதலாக கேட்ட உப்புக்கு பில் போட்டு அதிர வைத்த ஓட்டல்
- உப்புமாவில் உப்பு அதிகம் இருக்கலாம் ஆனால் உப்புமாவே அதிகமாக இருந்தால்?: மாடிக்கொண்ட தம்பதிகள்!
- உப்புமாவில் கடத்தல்: பிடிபட்ட பலே கில்லாடிகள்!!
பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் சக்தி பெற்ற உப்பு
உப்பை செல்வ தேவதையான லட்சுமிக்கு ஒப்பிடுவார்கள். ஏனென்றால் லட்சுமி கடலில் தோன்றியவர். உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் உப்பு லட்சுமி கடாட்சம் நிறைந்த பண்டமாக கருதப்படுகிறது.
நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை. இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது.
வெள்ளிக்கிழமை உப்பு செல்வத்தை குவிக்கும் என்பார்கள். அதாவது வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உண்டு.
புதுமனை புகுவிழாவில் முதலில் புதுவீட்டிற்குள் உப்பைதான் எடுத்துச் செல்வார்கள். வீட்டில் எல்லா செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டிதான் உப்பு முதலிடம் வகிக்கிறது. மேலும் உப்பால் மனிதர்களுக்கும், இல்ல நலன்களுக்கும் கிடைக்கும் பலன்களை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் உங்களை அண்டியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போவதை கூட உங்களால் உணர முடியுமாம்.
உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.
