1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 ஜூன் 2025 (09:29 IST)

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மூன்று கட்டங்கள் முடிவடைந்த நிலையில் 4வது மற்றும் நிறைவு விழா தேதியை புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் அவர்கள் நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார்.
 
முதல் கட்டமாக 30.05.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 04.06.2025 அன்றும் மூன்றாம் கட்டமாக 13.06.2025 அன்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
 
இதனையடுத்து, நான்காம் கட்டமாக நிறைவு விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (15.06.2025) நடைபெற உள்ளது. இதில், மாணவ, மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள்.
 
எதிர்கால சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. விஜய் அவர்கள், இந்த பாராட்டு விழாவில் மாணவ செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran