1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk it wing replied to senthil balaji

திராணி இருந்தா நேரில் ஆஜராகணும் மிஸ்டர் க்ளீன்!.. செந்தில் பாலாஜிக்கு தவெக பதிலடி!...

senthil balaji
நேற்று கரூரில் பேசிய முதல்வர் விஜய் ‘கரூர் கம்பெனி ஓனர் எங்கேயோ ஓடிவிட்டார்.. ஓடு ஓடு ஓடு’ என்று நக்கலடித்தார். இதற்கு பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ தளத்தில் ‘கரூரில் மக்கள் உயிரிழந்தபோது ஓடியது யார்?’ என்று மக்களுக்கு தெரியும்.. திமுகதான் மக்களை காப்பாற்றியது’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கு ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.

கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்.

“யாரை முதலமைச்சர் ஆக்கலாம்னு பார்த்தப்ப… அந்தப் பட்டியல்ல இவரும் இருந்தாருங்க… இவரு கெட்ட கேடு…” என்று ஸ்டாலின் சாரால் அன்பாக, பண்பாக, ஊழலற்ற நேர்மைக்காகப் புகழப்பெற்றவர்தான், இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கிளம்பி இருக்கிறார். அதைக்கூடப் பொதுவெளிக்கு வந்து கேட்கவில்லை. அதையும் ஒளிந்தபடி ஓடிக்கொண்டேதான் கேட்டிருக்கிறார்.

அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.

உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத்  திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்?

நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்!..’ என பதிவிட்டிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்