8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்திலும் பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்றும் காலை, 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழையும்; திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட 8 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva