1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (12:43 IST)

கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கு ஒப்புதல்.. நீதிமன்றம் வைத்த குட்டு..!

governor ragupathi
தமிழக அரசு தாக்கல் செய்த, கவர்னரின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் இன்று தீர்ப்பை அறிவித்தனர்.
 
அதில், அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் கவர்னர் எடுக்கும் முடிவுகள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்குட்பட்டவை என்ற முக்கியக்குறிப்பை நீதிபதிகள் வெளியிட்டனர். மேலும், சட்டமன்றம் மீண்டும் பரிசீலித்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
கவர்னர் கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்கள் தொடர்பாக, அவர் மேற்கொண்ட நடவடிக்கை சரியானதல்ல என்றும், மாநில சட்டமன்றத்தின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கவர்னர் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது எனவும், இவை அரசியலமைப்புக்கு முரணானவை எனவும் அவர்கள் கூறினர்.
 
இதனிடையே, ஜனாதிபதியிடம் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதால், பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் தற்போது சட்டமாகி செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
 
முடிவில், மாநில அரசின் செயல்களில் கவர்னர் தடையாக இருக்கக்கூடாது என்ற தீவிரக் கருத்தையும் உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.
 
Edited by Mahendran