1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Red alert to Tuticorin district

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

தூத்துகுடி
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்த அம்மாவட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது என்பதும் தமிழகம் முழுவதற்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மணி நேரங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,. மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
10 மணி நேரத்தில் 22 செ.மீ மழை: திருச்செந்தூர் கோவிலுக்குள் புகுந்த தண்ணீர்!