இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை முதல் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
விழுப்புரம்
மேற்கண்ட மாவட்டங்களின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கோயம்புத்தூர்
தருமபுரி
திண்டுக்கல்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
கரூர்
கிருஷ்ணகிரி
மதுரை
புதுக்கோட்டை
சேலம்
தென்காசி
தஞ்சாவூர்
தேனி
நீலகிரி
தூத்துக்குடி
திருச்சி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
விருதுநகர்
புதுச்சேரி
இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran