கோவில் நிலத்தை பள்ளிக்காக மாநகராட்சி வாங்கலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை, சென்னை மாநகராட்சி பள்ளிக்காக வாங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு, பொதுநலனுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தலாம் என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப் பள்ளி ஒன்று, பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் தேவஸ்தானத்தின் நிலத்தை வாங்குவது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்புப்படி, ரூ.18.85 கோடிக்கு மாநகராட்சி அந்த நிலத்தை வாங்கிக்கொள்ள அனுமதி அளித்தார். மேலும், இந்த வழக்கை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உத்தரவு, பொதுநலன் சார்ந்த திட்டங்களுக்காகக் கோயில் நிலங்களை அரசு வாங்கிக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அரசின் ஒரு துறை மற்றொரு துறைக்கு சொந்தமான நிலத்தை வாங்குவது, நிர்வாக ரீதியாக ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva