செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 செப்டம்பர் 2025 (16:28 IST)

பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும், நல்லதே நடக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும், நல்லதே நடக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும் என்றும்,  அவ்வாறு ஒன்றுபட்டால் தான் வருகின்ற தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும்" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது?" மற்றும் "அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நடக்கவில்லை என்று பலரும் கூறுகிறார்களே?" என்ற கேள்விகளுக்கு, செங்கோட்டையன் மிகவும் அமைதியாக, "பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்" என்று பதிலளித்தார்.
 
செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், கட்சி மீண்டும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், செங்கோட்டையனின் இந்த புதிய பதில், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran