திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! கீழடி குறித்து முதல்வர் பதிவு..!
கீழடி அகழ்வாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு உள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை தான் என பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!