கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?
டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து நேற்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
அதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva