1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜூன் 2025 (11:20 IST)

வங்கக்கடலில் வலுபெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்திலும் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா பகுதியில் இன்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Mahendran