1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. coimbatore cheran health science convation funcion

கோவையில் சேரன் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா...

convacation
கோவையில் சேரன் சுகாதார அறிவியல் நிறுவனத்தின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் தலைமையில் கல்விசார் அணிவகுப்புடன் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து, இறைவணக்கம், குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் சரஸ்வதி வந்தனாவுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சேரன் கல்விக் குழும முதன்மைச் செயல் அதிகாரி டாக்டர் எம். செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார்.

நிர்வாக இயக்குநர் திருமதி சினேகா ஸ்ரீதர் தலைமையுரை ஆற்றினார். பட்டமளிப்பு விழாவுடன் நிறுவனர் தினம் அனுசரிக்கப்பட்டது. நிறுவனர் கே.சி.பழனிசாமியின் மனைவி திருமதி சௌந்தரி பழனிசாமியின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 1991ல் தொடங்கப்பட்ட சேரன் கல்விக் குழுமத்தின் வளர்ச்சி மற்றும் விழுமியங்கள் குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் ஜே.என்.யு இணைப் பேராசிரியர் டாக்டர் ஜே.ஜெகநாதன் மற்றும் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் வாழ்த்துரை வழங்கினர். இயன்முறை மருத்துவம், மருந்தியல் மற்றும் செவிலியர் துறைகளில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இளங்கலை, முதுகலை அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலட்சுமி முன்னிலையில் பட்டதாரிகள் தொழில்முறை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் அதிகாரப்பூர்வ புகைப்பட அமர்வு நடைபெற்றது. விழாவில் நிறுவனத் தலைவர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, சிறப்பு விருந்தினரான பேராசிரியர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பட்டமளிப்பு விழாவின் முக்கியத்துவம், பட்டம் பெறும் மாணவர்களின் சாதனைகள் மற்றும் கல்வி நிறுவனத்தின் கல்விசார் பயணம் மற்றும் முன்னெடுப்புகள் குறித்த மதிப்புமிக்க கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!