புதன், 15 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 அக்டோபர் 2025 (17:30 IST)

சென்னை மெட்ரோ பணிகளுக்கு நாளை முதல் தடை.. மேயர் பிரியா அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ பணிகளுக்கு நாளை முதல் தடை.. மேயர் பிரியா அறிவிப்பு..!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள், நாளை (அக்டோபர் 15) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
 
பண்டிகை கால கூட்ட நெரிசல் மற்றும் வரவிருக்கும் பருவமழை காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ஆகிய வழித்தடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
நிறுத்தப்படும் இந்த பணிகள், மழைக்காலம் நிறைவடைந்த பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கலாம் என்று மெட்ரோ நிறுவனத்திற்கு மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
 
இந்த தற்காலிகத் தடை, பண்டிகை காலப் போக்குவரத்து சிரமங்களைத் தவிர்க்கவும், மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை சென்ட்ரல், விம்கோ நகர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ சேவை வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran