1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anitha radhakrishnan attack cm vijay again

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

anitha radhakrishnan
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் தொடர்ந்து தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் மிகவும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார்.
இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்நிலையில்தான் மீண்டும் அவர் முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியிருக்கிறார்..

நான் ஐந்து நிமிடம் பேசினேன் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க என ஒருத்தன் மார்தட்டி சொல்றான்.. சாயங்காலம் 6 மணிக்கு போனா காலைல 10 மணிக்குதான் எந்திரிப்பான்.. அவனுக்கு தமிழகத்தில் என்ன நடக்குதுன்னு தெரியாது என்று விஜயின் பெயரை சொல்லாமல் பேசினார்

மேலும், நான் பேசியதற்கு என்னை கைது செய்தார்கள்.. நான் ஐந்து வருடம் கூட சிறையில் இருப்பேன்.. ஆனால் உன் ஆட்சி என்ன ஆகும் தெரியுமா? தவெக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். சினிமாவில் நடிக்கிற மாதிரி இங்கயும் நடிக்கலாம்னு அவர் நினைக்கிறார்.. இந்த வேஷம் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது’ என்று பேசியிருக்கிறார்.