1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2025 (11:41 IST)

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

Senthil Balaji
உயிரி மருத்துவக் கழிவுகளை அப்பட்டமாக வெளியே வீசுபவர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து புதிய சட்ட மசோதா ஒன்று இன்று சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருந்த நிலையில் அவருக்கு பதிலாக  இன்று அமைச்சர் ரகுபதி மசோதாவை எடுத்துரைத்துள்ளார். 
 
 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிடலாம் என்ற கசியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சூழ்நிலையில், அவர் பதவியை விட்டுவிட்டால், ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் மசோதா விவாதத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்று பதிலளிக்க முடியாது என்பதால், முன்னேற்பாடாகவே இன்று அமைச்சர் ரகுபதி மூலம் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran