10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை, இன்று மதியம் 11 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய நிலையில் சற்றுமுன் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் 4.14 சதவீதம் பேர் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 4917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1867 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது என்பது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
வகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் 98. சதவீதமும் அதனை அடுத்து விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமாரி திருச்சி மாவட்டங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva