மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் உறவினர் பீகார் தேர்தலில் போட்டி.. எந்த கட்சி?
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினரான திவ்யா கவுதம், வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திகா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இவர், புதன்கிழமை அன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இவர் நாடக கலைஞர் மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராவார். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பாட்னா மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
திவ்யா கவுதமின் கட்சியானது, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சிகளின் 'மகாகத்பந்தன்' கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இவருக்கு இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran