சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருர் சோனியா காந்தி வயிற்று உபாதைகள் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில், சோனியா காந்தி இரைப்பை குடல் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஜூன் 9 அன்று சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்த காரணமாக சில பரிசோதனைகளை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva