1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூன் 2025 (17:10 IST)

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

SIMS Hospital

ஒருங்கிணைந்த திறந்தநிலை  இதய வால்வு மாற்று சிகிச்சையையும், TAVR வால்வு - தனித்துவமான பெருந்தமனி ஒட்டு அறுவைசிகிச்சையையும் இந்தியாவில் முதன் முறையாக செய்து சாதனை படைத்திருக்கும் சிம்ஸ் மருத்துவமனை!

 

●         ஏற்கனவே பென்ட்டால் சிகிச்சை செய்யப்பட்டிருந்த ஒரு நோயாளிக்கான மறுசிகிச்சையில் TAVR மற்றும் FET சிகிச்சைகளை ஒருங்கிணைத்து ஒரே அமர்வில் செய்திருப்பதன் மூலம் இந்தியாவில் இத்தகைய வகையினத்தில் முதல் வெற்றிகர சிகிச்சை என்ற சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

 

●         10 மணி நேரம் நடைபெற்ற இந்த மாரத்தான் கலவை அறுவைசிகிச்சையின்போது 4 மணி நேரத்திற்கும் அதிகமாக இதயநுரையீரல் பைபாஸ் நிலையில் நோயாளி வைக்கப்பட்டிருந்தார் மற்றும் அறுவை சிகிச்சை படிநிலைகளை ஏதுவாக்குவதற்காக 2 மணி நேரத்திற்கு அவரது இதயசெயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.  

 

 

 

சென்னை, ஜுன் 12, 2025: சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை, நாட்டிலேயே முதன்முறையாக ஒரு  மாரத்தான் ஓட்டம் போல நெடிய சிக்கலான, இதய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருக்கிறது.  மும்பையைச் சேர்ந்த ஒரு ஆண் நோயாளி ஒருவர் (வயது 61) அண்மையில் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே 11 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கலான இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்.  அந்நோயாளிக்கு தற்போது ஒரு புதிய பிரச்சனை உருவாகியிருந்தது.  அவருடைய உடலில் உள்ள முக்கியமான இரத்தக்குழாய் சேதமடைந்திருந்தது.  அதனை ஒரு நுணுக்கமான குழாயின் உதவியுடன் அகற்றியாக வேண்டும்.  அவரது வயது, ஏற்கனவே செய்த அறுவைசிகிச்சை ஆகிய பெரும் சவால்களை மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

 

இச்சூழலை சிம்ஸ் மருத்துவமனை லாவகமாகக் கையாண்டது. ஒரே  சிகிச்சை அமர்வில் இரு வேறு  அறுவை சிகிச்சை நடைமுறைகளை ஒருங்கிணைத்து இதனை மேற்கொள்ளலாமே என்று இம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதுமையாக சிந்த்தித்தனர்.

 

உடனடியாக இன்ட்ரா ஆபரேட்டிவ் டிரான்ஸ் கதீட்டர் ஆயோர்டிக் வால்வு ரீபிளேஸ்மென்ட் மற்றும் ப்ரோஸன் எலிபெண்ட் ட்ரங்க் எனப்படும் இரண்டு நடைமுறைகளை ஒருங்கிணைத்து அறுவைசிகிச்சை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.  வழக்கமான பைபாஸ் அறுவைசிகிச்சையாகவே இதனை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.  ஒரு மாரத்தான் ஓட்டம் போல ஒரே அமர்வில் தொடர்ச்சியாக முழு சிகிச்சையும் 10 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.  10 மணி நேரம் நடைபெற்ற இந்த மாரத்தான் கலவை அறுசைசிகிச்சையின்போது 4 மணி நேரத்திற்கும் அதிகமாக இதய – நுரையீரல் பை பாஸ் நிலையில் நோயாளி வைக்கப்பட்டிருந்தார் மற்றும் அறுவைசிகிச்சை படிநிலைகளை ஏதுவாக்குவதற்காக 2 மணி நேரத்திற்கு அவரது இதய செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.  சிக்கலேதுமின்றி நடைபெற்ற இந்த வெற்றிகர அறுவைசிகிச்சை முடிந்தபிறகு, நோயாளி 8 நாட்களில் (2 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது உட்பட) வீடு திரும்பினார்.

 

FET எனும் நடைமுறையில் இரட்டைப் பயன்பாடு கிராஃப்ட் பயன்படுத்தப்படும்.  அதாவது, சேதமடைந்த  ரத்தக்குழாயைப் போர்த்திப் பாதுகாக்கும் மென்மையான ஒரு சாதனத்தையும் அறுவைசிகிச்சை செய்வதற்கான (குழாய்க்குள் ஊடுருவும் தன்மை கொண்ட) ஒரு சாதனத்தையும் ஒருங்கே கொண்ட ஒரு கருவி பயன்படுத்தப்படும். இது பார்ப்பதற்கு யானைத் தந்தம் போலத் தோற்றமளிக்கும். இக்கருவியின் மேல்பகுதியானது, ரத்தக் குழாயின் வளைவைப் பற்றிக் கொள்கிறது. ஸ்டெண்ட் உள்ள பகுதியானது, பாதிக்கப்பட்ட ரத்தக்குழாயின்மீது மேவுகிறது.

 

இந்நோயாளிக்கு ஏற்கனவே பென்ட்டால் எனப்படும் சிக்கலான இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதில் சேதமடைந்த பெருந்தமனியும் மற்றும் பெருந்தமனி வால்வும் அகற்றப்படும்; ஒருங்கிணைந்த ஒரு ஒட்டுசெயல்முறை மேற்கொள்ளப்படும் புதிய ஒட்டு உறுப்புடன் கரோனரி இதயங்கள் மீண்டும் இணைக்கப்படும். இந்த முந்தைய அறுவைசிகிச்சை வெற்றிகரமாக இருந்தபோதிலும், பெருந்தமனியின் சில பகுதிகள் காலப்போக்கில் விரிவடைந்து, கிழிசல் ஏற்படும் ஆபத்தை அதிகமாக்கியிருந்தது மற்றும் மேலதிக அறுவைசிகிச்சையையும் அவசியமாக்கியிருந்தது. கூடுதலாக, மேலும் அவரது திசு வால்வு கடுமையாக குறுகி, கால்சிய படிமங்கள் சேர்ந்ததாக மாறியிருந்தது. இவ்விரண்டும் சேர்ந்து இருப்பது இந்தியாவின் இதய நோயியல் வரலாற்றில் சிக்கலான பாதிப்புகளுள் ஒன்றாக இதனை மாற்றியிருந்தது.     

 

சிம்ஸ் மருத்துவமனையில் இதயம் மற்றும் தீவிர இரத்தக்குழாய் நோய்கள் பிரிவின் இயக்குநரும், முதுநிலை மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் வி.வி. பாஷி இதுகுறித்துப் பேசுகையில், ‘பென்ட்டால் அறுவைசிகிச்சை ஏற்கனவே செய்துகொண்ட ஒரு நோயாளிக்கு TAVR மற்றும் FET சிகிச்சைகளை ஒருங்கிணைத்து, கதீட்டர் அடிப்படையில் வால்வு பொருத்தி இரத்தக்குழாய் வளைவை சரிசெய்வது எளிதான ஒன்றல்ல.  ஆனால், நாங்கள் அதனை செய்து முடித்திருக்கிறோம்.  இது இந்தியாவிலேயெ முதன்முறையாகும்.  வேறு எவ்விதமான மாற்றுவழிகளும் நோயாளியிடம் இல்லை. 


இந்நிலையில் இரண்டு மாறுபட்ட சிகிச்சை நடைமுறைகளை ஒரேமூச்சில் செய்து முடித்துவிட்டோம்.  துல்லியமும், புதுமையும் ஒன்றிணைந்தால் மட்டுமே இது சாத்தியம்.  இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள், இதய மயக்கவியல் நிபுணர்கள், இதயம் சார் சிறப்பு செவிலியர்கள், உடலியக்க நிபுணர்கள், தொழில்நுட்ப பணியாளர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியே இது.  துணிச்சலான அறுவைசிகிச்சை உத்தி மற்றும் துல்லியமான குழு திட்டமிடல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்போது சாதனைகள் சாத்தியமே என்று நாங்கள் நிரூபித்திருப்பது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.

 

இதுகுறித்து மேலும் பேசிய அவர், “இடர்மிகுந்த இரத்தக்குழாய் அறுவைசிகிச்சைகளைப் பொறுத்தவரை இப்புதிய அணுகுமுறை, நோயாளியின் பாதுகாப்பை அதிகரிக்கும். பைபாஸ் அறுவைசிகிச்சைக்கான நேரம் குறைவதும் இதய செயலிழப்பு தவிர்க்கப்படுவதுமே காரணம். சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தன் வாழ்நாள் முழுக்க இரத்த அழுத்த த்திற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.  அதேவேளையில், இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை நிண்டகாலம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இனி இருக்காது’ என்றார்.

 

சிம்ஸ் மருத்துவமனையின் இதயமார்புக்கூட்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். முகமது இத்ரீஸ் இது குறித்து கூறியதாவது: “இந்தியாவில் அதிக கடினமான இதய சிகிச்சைகளில் ஒன்றான இது, ஒரு கலவை (ஹைபிரிட்) செயல்முறையாக செய்யப்பட்டிருக்கிறது.  செயல்படுத்துவதற்காக இந்த அறுவைசிகிச்சை மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளதால், அறுவைசிகிச்சையின்போது எந்த சிரமங்களையும் மருத்துவக்குழு எதிர்கொள்ளவில்லை.


சிறப்பான தைரியத்தையும், தளர்வில்லாத ஆதரவையும் இந்நோயாளி வெளிப்படுத்தியது விரைவான குணமடைதலை சாத்தியமாக்கியது.  இதற்கு முன்னதாக, ஒரு பென்ட்டால் சிகிச்சை செய்யப்பட்டதற்குப் பிறகு, அதிக இடர்வாய்ப்புள்ள மறுசிகிச்சையின்போது TAVR மற்றும் உறைய வைக்கப்பட்ட யானை தும்பிக்கை பழுதுநீக்கல் ஆகிய இரண்டையும் இந்த சிகிச்சை நேர்வு ஒருங்கிணைத்திருந்ததால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிகிச்சை நிகழ்வாக இது இருக்கிறது.  எனினும், திட்டமிடப்பட்டவாறு ஒற்றை அமர்வில் சிக்கல்கள் எதுவுமின்றி, இந்த அறுவைசிகிச்சையின் இலக்குகள் வெற்றிகரமாக எட்டப்பட்டிருக்கின்றன.”

 

சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “சாதனை படைத்திருக்கும் இந்த மருத்துவ செயல்முறை, எமது மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு புது யுகத்தை உருவாக்கி பெருமை சேர்த்திருக்கிறது.  இதய சிகிச்சையின் தரம் மற்றும் புதுமையான உத்திகள் மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது. 


ஒரு கலவை செயல்முயற்சியாக நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சையின்போது இந்தியாவின் மிக அதிக சிக்கலான நேர்வுகளுள் ஒன்றான இதை கையாள்வதில் மெச்சத்தக்க அறுவைசிகிச்சை நுட்பத்தையும், தாங்கும் திறனையும் எமது மருத்துவக் குழுவினர் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  ஒரு மறுசிகிச்சை பென்ட்டால் நோயாளிக்கு TAVR மற்றும் FETஅறுவைசிகிச்சையை ஒரே அமர்வில் செய்திருப்பது பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.  எமது நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்கி வருவதற்காக எமது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.”  என்று கூறினார்.