ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!
ஒடிசாவின் கட்டாக் நகரில் நடைபெற்ற பாலி யாத்திரை திருவிழாவின் கடைசி நாளில், பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலின் நேரடி இசை நிகழ்ச்சியின்போது கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. பிரதான மேடையை நோக்கி பொதுமக்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட நெருக்கடியில், மூச்சுத்திணறல் காரணமாக இருவர் மயங்கி விழுந்தனர்.
விழாவின் நிறைவு நாளில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் தடுப்புகளை நோக்கி மக்கள் தள்ளியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர், மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இது குறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர் எஸ். தேவ்தத் சிங், கூட்டம் அதிகமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், இடிபாடுகளால் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், நிற்க முடியாதவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர் என்றும் தெளிவுபடுத்தினார்.
தேவையற்ற சம்பவங்களை தவிர்க்க, திருவிழா நிறைவுக்குமுன் கூட்டத்தை கையாளும் முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Edited by Siva