வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 நவம்பர் 2025 (08:34 IST)

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இன்று கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதை  அடுத்து சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இன்று அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து முடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இன்று அதிகாலை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பெரிய நடை பந்தல், சிறிய நடைபந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
 
மேலும், கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்ததை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர் என்பதும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva