ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்திற்காக போலீஸ் இடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் பெங்களூரில் ஏற்கனவே டிராபிக் பிரச்சனை அதிகமாக இருப்பதால், வெற்றி கொண்டாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலான நகரில் இந்த கொண்டாட்டம் தேவையில்லை என போலீசார் கூறிய நிலையில், ஆர்சிபி பிடிவாதமாக சில பிரபலங்களை பிடித்து இந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
மாநில அரசு நினைத்திருந்தால் இந்த கொண்டாட்டத்தை நிறுத்தியிருக்கலாம் என்றும், ஆனால் இந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்த மாநில அரசே 11 உயிர்கள் இழப்பிற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற இரவு அன்று கொண்டாட்டம் நடந்து விட்டது. அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து பெங்களூரில் கொண்டாட்டம் வைத்திருக்கலாம்.
அவசர அவசரமாக பெங்களூர் வந்து இறங்கிய 4 மணி நேரத்தில் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவைதானா என்று பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், இந்த அசம்பாவிதத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகமும் மாநில அரசும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran