ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை இந்தியாவில் இருந்து இங்கிலாந்து கொண்டு சென்ற நபர்.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!
பொதுவாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு வீட்டை மாற்றினால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து சொல்வது வழக்கமானது தான். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டுக்கு செட்டிலாக செல்பவர்கள் பொருட்களை விற்பனை செய்துவிட்டு முக்கிய பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்வார்கள். ஆனால் பஞ்சாபி சேர்ந்த ஒருவர் தனது சோபா செட், ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு சென்றதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பஞ்சாபி குடும்பம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கும், வீட்டுச் சாமான்களும் அனுப்ப 4.6 லட்சம் ரூபாய் செலவழித்தது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்டது. பின்னர் இன்ஸ்டாகிராமிலும் வைரலாகியது. இந்த வீடியோ குறித்து , "ஒருவர் தன் வீட்டையே தன் புதிய வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்!" என்று கூறியுள்ளார். இதில் பஞ்சாப் பதிவு எண் கொண்ட புல்லட் பைக்கை கண்டெய்னரில் இருந்து இறக்குவதை காணலாம். பைக்குடன் சேர்ந்து, சோபா செட், டைனிங் டேபிள், கட்டில்கள் உள்ளிட்ட சாமான்களும் அனுப்பப்பட்டுள்ளன.
பைக் உரிமையாளர் ராஜ்குரு இதுகுறித்து கூறியபோது, இந்த பொருட்கள் இந்தியாவின் கர்த்தார்பூரில் இருந்து எடுத்து அனுப்பப்பட்டுள்ளன. இந்திய பொருட்களின் தரம் மிகச் சிறந்தது என்பதால்தான் இவ்வாறு முடிவெடுத்ததாகவும், அவரது குடும்பம் இங்கிலாந்தில் நிரந்தரமாக குடியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ 3.9 மில்லியன் பார்வைகளும், 2.4 லட்சம் லைக்குகளும் பெற்றுள்ளது. பலரும் புல்லட் பைக்கின் முக்கியத்துவம் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
Edited by Siva